
கரூர்: “கரூர் சம்பவத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதனால், யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. காவல் துறை தரப்பில் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டன. அளவுக்கு அதிகமான கூட்டம் வரும்போது சரியான நேரத்துக்கு வந்திருக்க வேண்டும். வாரம்தோறும் சம்பந்தப்பட்ட தலைவர் வருகிறார். அவரிடமும் இது குறித்து கேளுங்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.