
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்கை அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.ஜோதிமணி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.