
சென்னை: தவெக தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது போல், சாலை வழிப் பரப்புரையில் எவ்வளவு பேர் திரளுவார்கள் என மதிப்பிட்டு, அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இருந்தது தமிழக வெற்றிக் கழக தலைமையின் கடுமையான தவறாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூர் மாநகரில் சாலை வழி பரப்புரை செய்தார். இந்த நிகழ்வில் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.