
கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்திருந்தார்.