
ஈரோடு: கரூரில் நடந்த அசம்பாவித சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. கரூரில் கட்சியின் கொங்கு மண்டல இளைஞர் அணி கூட்டம் நடைபெற இருந்தது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான மருத்துவ முகாம் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை.