
ராமநாதபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “கரூரில் சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. சிறு அசம்பாவிதமும், சிறு காயமும் அடையாமல் மக்கள் வருகை தந்து விட்டு அவரவர் ஊர்களுக்கு திரும்பபிச் சென்றார்கள். காரணம் வந்தவர்கள் ஒரு ஒழுங்கை கடைப்பிடித்தார்கள்.