
கரூர்: “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்? அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும், மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் போன உயிர்கள் மீண்டும் வருமா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூரில் நேற்று விஜய் பிரச்சாரம் செய்த இடத்தை பார்வையிட்டு பேசிய நயினார் நாகேந்திரன், “பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?