
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, இம்மாத தொடக்கத்தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக உ.பி. போலீஸார், வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்தனர்.
இதைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.