
ஜார்சுகுடா: பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடிசாவின் ஜார்சுகடா நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இத்துடன் 97,500 செல்போன் டவர்களும் திறக்கப்பட்டன.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டாகும். இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடிசாவின் ஜார்சுகுடா நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.