
ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடிக்கிறது’ என்று குற்றம் சாட்டி உள்ளார். ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஜார்சுகுடா நகரில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.