• September 28, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, பொன்​ மாணிக்​கவேல் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை கூறி, உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காதர்​பாட்சா மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், பொன்​ மாணிக்​கவேல் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கு​மாறு சிபிஐ-க்கு உத்​தர​விட்​டது. அதன்​பேரில், அவர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​து, மதுரை மாவட்ட கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *