
புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 27 இந்திய வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக ரஷ்ய ராணுவத்தில் வெளிநாட்டினர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் வலியுறுத்தலின்பேரில் கடந்த சில ஆண்டுகளில் 96 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சுமார் 12 இந்திய வீரர்கள் போரில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.