• September 28, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: கல்விக்கு நிதி ஒதுக்​கீடு செய்​யாமல், விளம்​பரத்​துக்​காக விழா நடத்தி மக்​களின் வரிப்​பணத்தை திமுக அரசு வீணாக்​கு​வ​தாக பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

‘உரிமை மீட்க; தலை​முறை காக்க’ என்ற பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள அன்​புமணி நேற்று திண்​டுக்​கல்​லில் பொது​மக்​கள் மற்​றும் பங்​குத் தந்​தையர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் மாநில அரசு நடத்​தும் சாதி வாரி கணக்​கெடுப்​புக்கு தடை கிடை​யாது. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த மத்​திய அரசுக்கு மட்​டுமல்ல, மாநில அரசுக்​கும் முழு அதி​காரம் இருக்​கிறது என்று நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர். அதன் பிறகும், தமிழகத்​தில் சாதி வாரி கணக்​கெடுப்பு நடத்த எங்​களுக்கு அதி​காரம் இல்லை என்று முதல்​வர் சொல்​வதை மக்​கள் ஏற்க மாட்​டார்​கள். அவருக்கு தமிழக மக்​கள் பாடம் புகட்​டு​வர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *