• September 28, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 33-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையம் வந்த விஜய்யிடம் கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

விஜய் பரப்புரை

ஆனால் அதற்கு விஜய் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் விஜய்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *