
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், திருச்சி, சேலம், திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்கு சென்று மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடும்படி அறிவித்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.