
சென்னை: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.