• September 27, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: “திமுக குடும்பத்துக்கு ஊழல் பணத்தை கொண்டு சேர்க்கும் பணியில், ஏடிஎம் ஆக மாஜி மந்திரி செயல்பட்டு வருகிறார்” என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்டு, தவெக தலைவர் விஜய் பேசினார்..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரவு 7 மணி அளவில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரச்சார உரையில், “கரூர் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர். இங்கு ஜவுளித் தொழில் சார்ந்த சந்தை மிகவும் பிரபலம். இப்படி கரூரை குறித்து பெருமையாக சொல்லிக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், அண்மைக் காலமாக கரூர் என்று சொன்னாலே இந்தியா முழுவதும் ஒரே ஒருவரின் பெயர்தான் பிரபாலமாக அறியப்படுகிறது. அதற்கு யார் காரணம்? அது யார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *