
பெருங்களத்தூரில் கண்துடைப்புக்காக கட்டப் பட்டுள்ள உரக்கிடங்கால் ரூ.1 கோடி மதிப்பிலான மக்களின் வரிப் பணம் வீணாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, 4-வது மண்டலம், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள 54, 55-வது வார்டுகளில் சேகரமாகும் குப்பை, கன்னடப் பாளையம் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்க ஏதுவாக 55-வது வார்டில் உள்ள மெட்ரோ கிளாசிக் ஹவுசிங் லேஅவுட்டில் உள்ள அரசு இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.