
அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். லாலு தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தலை முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால், பாஜகவினருக்கு அப்படியல்ல.