
நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. அதன்படி 19-ம் தேதி அங்கு அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், மற்ற இரண்டு நாள் பயணம் அடுத்த மாதம் 4, 5 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழையால் ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், “நாமக்கல் மாவட்ட அதிமுக-வில் நாமக்கல் மாநகரச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பி.பி.பாஸ்கர், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு எதிராக தனி ஆவர்த்தனம் செய்து வருவது தலைமை வரைக்கும் தெரிந்த விஷயம் தான்.