• September 27, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. அதன்படி 19-ம் தேதி அங்கு அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், மற்ற இரண்டு நாள் பயணம் அடுத்த மாதம் 4, 5 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழையால் ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்​மிடம் விரி​வாகப் பேசிய நாமக்​கல் மாவட்ட அதி​முக நிர்​வாகி​கள் சிலர், “நாமக்​கல் மாவட்ட அதி​முக-​வில் நாமக்​கல் மாநகரச் செயலா​ள​ரும் முன்​னாள் எம்​எல்​ஏ-வு​மான கே.பி.பி.​பாஸ்​கர், மாவட்​டச் செய​லா​ள​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான தங்​கமணிக்கு எதி​ராக தனி ஆவர்த்​தனம் செய்து வரு​வது தலைமை வரைக்​கும் தெரிந்த விஷ​யம் தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *