• September 27, 2025
  • NewsEditor
  • 0

மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீவிர கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த அண்ணாமலை இப்போது திடீரென, கூட்டணியை விட்டு விலகிச் சென்ற தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைக்கிறேன் என்ற பேரில் திடீர் சந்திப்புகளை நிகழ்த்தி பரபரப்பான கருத்துகளை பேச ஆரம்பித்திருப்பது அண்ணாமலை தனி ரூட் எடுக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

தனிக்கட்சி தொடங்கப் போகிறார், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு தவெக உடன் கூட்டணி வைக்க பிளான் போடுகிறார் என்றெல்லாம் அண்ணாமலை குறித்து செய்திகள் பரப்பப்படும் நிலையில், அவரது நகர்வுகளை உற்று நோக்கி வரும் அரசியல் நோக்கர்களோ, “தனிக் கட்சி ஐடியாவெல்லாம் அண்ணாமலைக்கு இல்லை. டெல்லி தலைமை என்ன சொல்லி இருக்கிறதோ அதைத்தான் அவர் இப்போது வேறு ரூட்டில் செய்து கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *