
நாமக்கல்: “பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ள திமுகவிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”என்று தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் பேசினார்.
கடந்த செப்.13-ம் தேதி சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அன்று திருச்சியில் தொடங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.