• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்த அறூகுட்டி சிறையை நினைவகமாக மாற்றும் பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்தில், தந்தை பெரியார் பங்கேற்றபோது கைதாகி, அங்குள்ள அறூகுட்டி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையை பெரியார் நினைவகமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, வைக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கேரள மீன்வளம், கலாச்சார துறை அமைச்சர் சஜி செரியன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *