• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 4,510 விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார். தமிழக இளைஞர் நலன், விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை சார்​பில் சர்​வ​தேச, ஆசிய, தேசிய அளவி​லான விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​கள் வென்ற வீரர்​களுக்கு உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்​து, 819 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்​கத்​தொகைக்​கான காசோலைகளை வழங்​கி​னார். பணி​யின்​போது கால​மான தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய பணி​யாளர்​களின் வாரிசுகளான எஸ்​.தீ​பா, ஆர்​.​தினேஷ், எம்​.​தினேஷ்கு​மார், பி.ஹரிஷ் ஆகிய 4 பேருக்கு கருணை அடிப்​படை​யில் பணி நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *