• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீலக்​கொடி கடற்​கரை திட்​டத்தை எதிர்த்து சென்​னை​யில் மீனவர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை கடற்​கரைகளில் அமல்​படுத்​தப்​படும் நீலக்​கொடி கடற்​கரை, கடல்​ மேம்​பாலம், எண்​ணெய் எரி​வாயு போன்ற திட்​டங்​களை எதிர்த்து தென்​சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்​பாக மீனவர்​களின் கண்டன ஆர்ப்​பாட்​டம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. சபை​யின் ஒருங்​கிணைப்​பாளர் என்​.ரத்​தினவேல் தலைமை வகித்​தார்.

ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீலக்​கொடி திட்​டம் வந்​தால் கடற்​கரை​யில் இருக்​கக்​கூடிய மீனவர்களின் கட்​டுமரங்​கள், வலைகள், ஃபைபர் படகு​கள் ஆகிய​வற்றை அகற்ற வேண்​டிய சூழல் ஏற்​படும். இத்​திட்​டம் உலக நாடு​களுக்கு பொருந்​தும். ஆனால் இந்​தியா போன்ற நாடு​களுக்கு பொருந்​தாது. ஏனென்​றால் இங்கு கரைதொழில் செய்​யக்​கூடிய மீனவ சமூகங்​கள் நிறைய உள்​ளன. மீன் பிடித்​தொழில் நடை​பெறும் இடத்​தில் நிச்​சய​மாக மீன் வாடை வரும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *