
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அண்மையில் பேசியிருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை மேற்கொண்டது. பின்னர், இது தவறான தகவல் என விளக்கமும் அளித்திருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்தி, தீர்வு கான வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்துள்ளார்.