
புதுடெல்லி: “இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்யாவை மறைமுகமாக பாதிக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்புறுத்தினார்” என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியிருந்தார்.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது: உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்புறுத்தினார் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது.