• September 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பேரி​யம் நைட்​ரேட் போன்ற வேதிப்​பொருட்​கள் பட்​டாசு தயாரிப்​பில் பயன்​படுத்​து​வ​தால் உடல் நலனுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் கேடு ஏற்​படு​வ​தாகத் தெரி​வித்து அவற்​றைத் தடை செய்​யக் கோரி அர்​ஜுன் கோபால் உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பசுமை பட்​டாசுகளை மட்​டுமே தயாரிக்க வேண்​டும் என தீர்ப்பு வழங்​கியது.

இதனிடையே பட்​டாசு வெடிப்​ப​தற்​குத் தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் தாக்​கல் செய்த மற்​றொரு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பட்​டாசு விற்​பனைக்​கும், வெடிப்​ப​தற்​கும் தேசிய தலைநகரப்​ பகு​தி​களில்​(என்​சிஆர்) கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்​தது. இதனால் பட்​டாசு தொழிலை மட்​டுமே நம்​பி​யுள்ள லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறி பட்​டாசு தயாரிப்பு நிறு​வனங்​கள் தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமயி​லான அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *