
புதுடெல்லி: உ.பி. அயோத்தியில் இருந்து 3 முறை எம்.பி.யாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார். அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்லை. அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். அண்டை மாவட்டங்களான கோண்டா மற்றும் பஸ்திக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அயோத்தியில் இந்துக்கள் முழு உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். பாபர் மசூதி அல்லது வேறு எந்த மசூதிக்கும் பதிலாக புதிய மசூதி அயோத்தியில் கட்ட அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.