• September 27, 2025
  • NewsEditor
  • 0

சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்து கொண்​டார். முப்​படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவு​கான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்​திர திவே​தி, கடற்​படைத் தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *