• September 27, 2025
  • NewsEditor
  • 0

திருப்​பதி: திருப்பதி மாவட்​டம், ஏர்​பேடு மண்​டலம், செங்​காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ஜி. யுகந்​தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்​டில் இண்​டர்​மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்​டிருந்​த​போது, ஒரு சிறு​வனை கடத்தி கொலை செய்த வழக்​கில் அவருக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து யுகந்​தர், கடப்பா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

சிறை​ அதி​காரி​களின் உதவியுடன், ஹைத​ரா​பாத்​தில் உள்ள பி.ஆர். அம்​பேத்கர் தொலை​தூர கல்வி பல்​கலைக்​கழகத்​தில் படித்து அடுத்​தடுத்து 4 பட்​டப் படிப்​பு​களை அவர் நிறைவு செய்​தார். இதனை தொடர்ந்து 3 பட்ட மேற்​படிப்​பு​களை படித்து முடித்​துள்​ளார். சிறப்​பாக படித்து அதிக மதிப்​பெண்​ பெற்றதால் தங்​கப் பதக்​கம் வழங்க பல்​கலைக்​கழகம் முடிவு செய்​தது. வரும் 30-ம் தேதி பல்​கலைக்​கழகத்​தின் 26-வது ஆண்டு விழாவில், யுகந்​தருக்கு தங்​கப்​ பதக்​கம்​ வழங்கப்பட உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *