
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதி அன்று தொடர்வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தொடர்ந்து “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை” என்ற அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகள் வழங்க இயலாது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.