• September 27, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்​யச் சென்​றவர்​கள் மீது குங்​குமம் பூசி​ய​தாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனின் அலு​வலக உதவி​யாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளத்தைச் சேர்ந்த 30-க்​கும் மேற்​பட்​டோர் கீழக்​கல்​லூர், நடுக்​கல்​லூர் கிராமங்​களுக்கு கடந்த 22-ம் தேதி வந்​துள்​ளனர்.

அவர்​கள் கீழக்​கல்​லூர் பகுதியில் மதப் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறி, இந்து முன்​னணி மாவட்​டச் செய​லா​ளர் மணி​கண்​டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்​கு​ராஜ் உட்பட 3 பேர் வழிமறித்​து, வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர், அவர்​களில் சிலரை அரு​கி​லிருந்த கோயிலுக்கு அழைத்​துச் சென்​று, நெற்​றி​யில் குங்​குமம் பூசி, கடவுளிடம் மன்​னிப்பு கேட்​டு​விட்​டுச் செல்​லும்​படி வற்​புறுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *