
சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் விஷ்ணுபிரசாத் (கடலூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ஜோதிமணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), ஆர்.சுதா (மயிலாடுதுறை), கோபிநாத் (கிருஷ்ணகிரி), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்) ஆகிய 9 பேர் காங்கிரஸ் எம்பிக்களாக உள்ளனர்.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸின் மகளிரணி நிர்வாகியாக இருந்தவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.