
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவரும் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, இவர்கள் இருவருக்கும் நேற்று உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா நிரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி உறுதிமொழி ஏற்று இருவரும் நேற்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.