
சென்னை: தமிழகத்தில் டிசம்பருக்குள் முழுமையான 4ஜி சேவை வழங்கப்படும் என தமிழக வட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்தார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 92,600 பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் டவரை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக, தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு சுமார் ரூ.245 கோடி மதிப்பீட்டில் 4ஜி டவர் அமைத்தல், பழைய டவர்களை மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டன.