
சென்னை: அக்டோபர் மாதத்துக்கான 20.22 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.