
சென்னை: பாமக சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை ன், இருக்கையும் ஒதுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலரிடம் அன்புமணி தரப்பினர் மனு அளித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் வழக்கறிஞர் பாலுவுடன் நேற்று சென்னை தலைமைச் செயலகம் சென்று, சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனை சந்தித்தனர். ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியை சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனு கொடுத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பாலு கூறியதாவது: