• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் உள்ள 2,236 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் நாய்க்​கடிக்​கான மருந்து இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்தார். சென்னை மேற்கு மாம்​பலம், மேட்​டுப்​பாளை​யம் எத்​தி​ராஜ் நகரில் நடை​பெற்ற ‘உங்களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்​டார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மிகப்​பெரிய அளவில் மக்​களை ஈர்த்​திருக்​கிறது. ஜூலை 15 முதல் நவ.14-ம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்​கள் நடத்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இது​வரை தமிழகம் முழு​வதும் 7,427 முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. அதில் 55.55 லட்​சம் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் இது​வரை 323 முகாம்​கள் நடை​பெற்​று, 5.45 லட்​சம் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *