
சென்னை: பத்திரப்பதிவு இணையதள வழிகாட்டி மதிப்புக்கேற்ப பத்திரப் பதிவு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பனனீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 52 மாத திமுக ஆட்சியில், நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு நீதிமன்றம் தடை விதித்தும், அதை நடைமுறைப்படுத்தவில்லை. பேசிக், பிரீமியம், அல்ட்ரா பிரீமியம் என 3 வகைகளாக பிரித்து, வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.