• September 26, 2025
  • NewsEditor
  • 0

“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார்.

‘வெல்​வோம் 200… படைப்​போம் வரலாறு’ என சூளுரைத்​துக் கிளம்பி இருக்​கும் திமுக, தேர்​தல் ஓட்​டப் பந்​த​யத்​தில் மற்ற கட்​சிகளை​விட சற்று வேக​மாகவே ஓடிக்கொண்​டிருக்​கிறது. அரசின் திட்​டங்​களைச் சொல்லி மக்​களுக்கு நெருக்​க​மாகி வரும் அதேவேளை​யில், தமி​ழ​கத்தை 8 மண்​டலங்​களாகப் பிரித்து முக்​கிய அமைச்​சர்​களை அதன் பொறுப்​பாளர்​களாக நியமித்​தும் தேர்​தல் வேலை​களை முடுக்கி விட்​டிருக்​கிறது திமுக தலை​மை. மண்​டலப் பொறுப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்ள அமைச்​சர்​களுக்கு சராசரி​யாக 30 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தங்​களின் தலைக்​கும் கத்தி இருக்​கிறது என்​ப​தால், தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட தொகு​தி​களில் மண்​டலப் பொறுப்​பாளர்​கள் பம்​பர​மாய் சுற்​றிச் சுழன்று வரு​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *