
அண்மையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட எடப்பாடியார், “குன்னூர் நகராட்சியில் டெண்டர் விடும் பணிகளில் திமுக துணைத் தலைவர் ஊழல் செய்திருப்பதாகவும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்திருக்கின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடி கிளப்பினார்.
எடப்பாடியார் பற்றவைத்த இந்தப் பட்டாசு குன்னூர் திமுக-வினரை தகிக்க வைத்திருக்கிறது. முன்னாள் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக்கின் மகன் வாசிம் ராஜா தான் இப்போது குன்னூர் நகராட்சி துணைத் தலைவராக இருக்கிறார் என்பதால் இது மாவட்ட அரசியலிலும் பேசுபொருளாகி இருக்கிறது.