
கரூரில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், பிரச்சார இடத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தவெக தலைவர் விஜய், கரூரில் நாளை பிரச்சாரம் செய்ய லைட்ஹவுஸ் முனை, உழவர் சந்தை உள்ளிட்ட 4 இடங்களை குறிப்பிட்டு போலீஸில் அனுமதி கோரியிருந்தனர். எத்தனை வாகனங்கள் வரும். எத்தனை பேர் கலந்துகொள்வர் உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டனர். ஆனால், இதற்கு உரிய பதிலை வழங்காததால் விஜயின் பிரச்சார இடம் உறுதி செய்யப்படாமல் இருந்தது.