
திருச்சி: ‘‘விவசாயிகளுக்கு மட்டும் 56 வாக்குறுதிகளை கொடுத்தது திமுக. அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது. மீதம் 48 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றி விட்டது’’ என்று திருச்சியில் விவசாயிகள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் சாமி தாிசனம் செய்தார்.