
திருநெல்வேலி: “தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அருகே உள்ள தேவர் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். போதைப் பொருள் புழக்கம் காரணமாக பல்வேறு இடர்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தீர்வு காண முடியாத அரசாக திமுக அரசு உள்ளது.