
புதுச்சேரி: விஜய்யின் பின்னால் வரும் கூட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை, பெங்களூரு புகழேந்தி இன்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை கட்சியை முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.