
பெங்களூரு: பத்ம பூஷன் விருதுபெற்ற கன்னட எழுத்தாள‌ர் எஸ்.எல்.பைரப்பா (94) உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் காலமானார் (94).
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்ணாவில் 1931-ல் பைரப்பா பிறந்தார். 20-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவை கன்னடத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.