
புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாகவும் (சிடிஎஸ்), ராணுவ விவகார துறையின் செயலராகவும் அனில் சவுகான் (64) பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைய உள்ளது.