• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள நிலையில், அந்தப் பிரச்சாரங்கள் எந்த இடத்தில் நடைபெறும், எந்த நேரத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூரில், வேலுச்சாமிபுரம் பகுதியில், நண்பகல் 12.00 மணிக்கும் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *