
குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் குழாய்களை பராமரிக்காததால் தண்ணீர் ஆறுபோல ஓடியது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய கொட்டிய மழை நேற்று பகலிலும் தொடர்ந்தது. இதனால் குளிரான தட்ப வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 31 மிமீ., மழை பெய்தது. பேச்சிப்பாறையில் 30, பாலமோரில் 22, பெருஞ்சாணி, சுருளோட்டில் தலா 21, மழை அடையாமடையில் 14, இரணியலில் 13 மிமீ., மழை பதிவானது.